திங்கள், 27 ஜூன், 2016

புதிய ஊற்று - வலைத்திரட்டி விரைவில் வெளிவரும்

இனிய எங்கள் வலையுறவுகளே!
வலைப்பூக்களில் புதிய பதிவுகள் பதியப்பட்டதும் வலைத்திரட்டிகள் ஊடாகப் பரப்புகிறோம். அவ்வகையில் இயங்கி வந்த பல வலைத்திரட்டிகள் இன்று செயலிழந்து விட்டன. ஆயினும், ஊற்று - வலைத்திரட்டி உங்கள் வலைப்பதிவுகளைத் தானியங்கி முறையில் சுடச் சுடத் திரட்டி வழங்கியது. ஊற்று முயன்று வெளிப்படுத்திய திரட்டியில் சில குறைகளும் இருக்கத்தான் செய்தது. அதனைச் சுட்டிக் காட்டிய நட்புகளுக்கு எமது நன்றி.

ஊற்று - வலைத்திரட்டியின் முதற் பதிப்பில் சிறு மாற்றம் (அழகுபடுத்தி) செய்து கீழ்வரும் இணைப்பில் பேணுகிறோம்.

ஊற்று - வலைத்திரட்டியின் இரண்டாம் பதிப்பில் வெளியீட்டு விரிப்பில் மாற்றம் செய்து பார்வைக்கு இலகுபடுத்திக் கீழ்வரும் இணைப்பில் பேணுகிறோம்.

ஊற்று - வலைத்திரட்டியின் மூன்றாம் பதிப்புப் பல வசதிகள் கொண்ட சிறப்பு வலைத்திரட்டியாக வெளிவர இருக்கிறது. அதுவும் தானியங்கி முறையில் புதிய பதிவுகளைச் சுடச் சுடத் திரட்டி வழங்கும் என்பதனைத் தெரிவிக்கின்றோம்.

இனிய எங்கள் வலையுறவுகளே!
எமது முயற்சிகள் வெற்றியடைய உங்கள் ஆதரவை நாடி நிற்கின்றோம். மேற்படி எமது வலைத்திரட்டி முயற்சிகளை உங்கள் நட்புகளுடன் பகிர்ந்து, அவர்களையும் எமது வலைத்திரட்டியில் இணையச் செய்யுங்கள். எமது வலைத்திரட்டியில் உள்ள குறைகளைச் சுட்டிக் காட்டி, எமது வலைத்திரட்டியின் அடுத்த பதிப்பினைச் சிறந்த தளமாக வெளியிட உதவுங்கள்.

இவ்வண்ணம்

'ஊற்று' வலையுலக எழுத்தாளர்கள் மன்றம்

ஞாயிறு, 5 ஜூன், 2016

சித்திரை வருடப்பிறப்பு கவிதைப்போட்டியின் வெற்றியாளர்கள்.-2016

சித்திரை வருடப்பிறப்பை முன்னிட்டு சித்திரை மகளே வாராய் என்ற தலைப்பில் 100 க்கு மேற்பட்ட கவிஞர்கள் போட்டியில் பங்கு பற்றினார்கள்  ஒவ்வொரு கவிஞர்களும் படைத்த கவிதைகள் மிக அருமையாக உள்ளது இருந்தாலும் வெற்றியாளர்கள் தேவை அல்லவா அதில் இருந்து தரமான கவிதைகள் வடிகட்டப்பட்டது அந்த வெற்றியாளர்கள் விபரம் வருமாறு.

பல சிரமங்களுக்கு மத்தியில் நடுவராக இருந்து தமது கடமையை சிறப்பாக செய்து முடித்த நடுவர்களுக்கு எனது நன்றிகள் பல.

திரு.கவிஞர் ரமணி ஐயா
திரு. நா.பச்சைப்பாலன்ஐயா.
திரு.திண்டுக்கல் தனபாலன்
திரு .கா. யாழ்பாவாணன்

ஆகியோருக்கும் ஊற்று செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் ஊற்று அமைப்பாளர் என்ற அடிப்படையில் எனது நன்றியை கூற கடமைப்பட்டுள்ளேன்.

வெற்றி பெற்ற போட்டியாளர்கள் தங்களின் முகவரியை அனுப்புமாறு தாழ்மையாக வேண்டிக்கொள்கிறேன் பரிசுப்பொருட்கள் தபாலில் வந்து சேரும்.

ootru2@gmail.comஇந்த மின்னஞ்சலுக்கு தங்களின்முகவரியை அனுப்புமாறு வேண்டிக்கொள்கிறேன்

1ம் இடம் பெற்ற கவிதை.
சித்திரை மகளே, வாராய்!-1
1
சித்திரை மகளே, வாராய்! சீர்பல கொணர்ந்து சேர்ப்பாய்!
இத்தரை செழிக்கச் செய்வாய்! ஏழைகள் இடர்து டைப்பாய்!
நித்திரை விலக்கி வைப்பாய்! நீடிய பெருமை சேர்ப்பாய்!
முத்திரை பதித்துச் செல்வாய்! முன்னிலும் புதிதாய் வந்தே!
2
கார்முகில் மழையு குக்கக், காடெலாம் பசுமை பூண,
நீர்வளம் பெருகி ஓட, நீணிலம் விளைச்சல் கூட,
சீர்பட விலங்கி னங்கள் சிறக்க, வளமை சேர்க்க,
பார்வளம் பெருகப், பஞ்சம் பட்டினி ஒழிக்க வாராய்!
3
சோலையில் மலர்கள் பூக்கச், சூழவண் டினங்கள் பாட,
காலையில் குயில்கள் கூவக், கண்கவர் மயில்கள் ஆட,
மாலையில் மணக்கும் தென்றல் மட்டிலாக் குளுமை சேர்க்க,
ஓலையில் கிளிகள் ஊஞ்சல் உந்திட வருக, பாவாய்!
4
நாட்டினில் அமைதி காக்க, நல்லறம் தழைத்து நிற்க,
கூட்டமாய் இணைந்து மக்கள் கூடியே இனிது வாழ,
வாட்டிடும் வறுமை நீங்க, வாய்த்திடும் தொழில்கள் ஓங்க,
பூட்டிய விலங்கொ டிக்கப் பூவையே, மகிழ்ந்து வாராய்!
5
மக்களின் நலத்தை நாடும் மாநில அரசு வேண்டும்!
தக்கவர் அமைச்ச ராகித் தாழ்நிலை தவிர்க்க வேண்டும்!
திக்கெலாம் புகழ நீதி செய்திட நடுவர் வேண்டும்!
சிக்கலாய்ப் பெருகும் ஊழல் தீய்த்திட வருக, பாபாய்!


2ம் இடம் பெற்ற கவிதை


சித்திரை மகளே வாராய்!

சித்திரை மகளே வா வா! - உன்னை சிறம் தாழ்ந்து
கரம் பணிந்து வணங்குகின்றோம் வா வா!

கோடி பலன்கள் கொட்டித்தரும்
குணங்கள் பல கொண்ட ஆன்மீக 
மகளே (மாதமே) வா வா!

சொக்கநாதர் திருக்கல்யாணத்தையும்
சித்திரை மாத பௌணமியையும் கொண்ட
தமிழரின் முத்திரை மாத மகளே வா! வா!

அழகர் கோயில் சித்திரைத் திருவிழாவையும்
தஞ்சை பிரகதீஸ்வரர் திருக்கோயிலின்
திருவிழாவையும் - மேலும் பல்வேறு
திருதளங்களில் ஆராதனைளையும் அர்ச்சனைகளையு
தன்னகத்தே கொண்ட சித்திரை பாவையே வா! வா!

ஊர்கூடி தேர் இழுத்தது போல
உலகம் கூடி போற்றும் திருநாட்களை - உன்
அகத்தே உள்ளடக்கிக்கொண்டிருக்கும்
உன்னத கலைமகளே வா! வா!

பாவ புண்ணியத்தின்  கணக்கெழுதும்
சித்திர புத்திரனும்
தசரத சக்கரவர்த்தியின் தவபுதல்வன்
ராமபிரானும்
மதத்தில் புரட்சி செய்த மகான்
ஸ்ரீ ராமனுஜனும்
மகத்தான போதனைகளை உலகிற்கு வழங்கிய
மகவீராரும்
அவதரித்த சித்திரை மகளே வா! வா

இச்சித்திரை பிறக்கும் திருவழா
இத்திரையோர்களுக்கு பெருவிழா!
கைகூப்பி உனை வணங்குகின்றோம் வா! வா

3ம்இடம் பெற்ற கவிதை
சித்திரை மகளே வாராயா’3

சித்திரை மகளே வாராயா- எங்கள்
சித்திரை மகளே வாராயா...

பங்குனித் திங்கள் ஓடி மறைந்திட
பொங்கும் மங்களம் எங்கும் நிறைந்திட
தங்கத் தமிழ்மொழி ஓங்கி வளர்ந்திட
பாங்குடன் பண்பிணை போற்றி மகிழ்ந்திட

சித்திரை மகளே வாராயா- எங்கள்
சித்திரை மகளே வாராயா...

பசியும் பஞ்சமும் இல்லாதொழிந்திட
பகைவர் யாவரும் அன்புறவாடிட
பாசமும் நேசமும் அவனியில் நிலைத்திட
பொய்யும் புரட்டும் நமை விட்டோடிட

சித்திரை மகளே வாராயா- எங்கள்
சித்திரை மகளே வாராயா...

மாவிலைத் தோரணம் வாசலில் அசைந்திட
மாக்கோலம் அழகுடன் கண்களை கவர்ந்திட
மங்கள இன்னிசை எங்கும் முழங்கிட
மகிழ்வுடன் துன்முகி ஆண்டு பிறந்திட

சித்திரை மகளே வாராயா- எங்கள்
சித்திரை மகளே வாராயா...

-நன்றி-
-அன்புடன்-
-ஊற்று அமைப்பாளர்-
கவிஞர்.த.ரூபன்-


வியாழன், 2 ஜூன், 2016

ஊற்று நடாத்திய முதலாவது கருத்தரங்கு

வலை உறவுகளே! இலக்கிய நாட்டமுள்ள எல்லோருக்கும் வலைப்பூக்களை நடாத்துவது எப்படி, இலக்கியம் படைப்பது எப்படி எனப் பயிற்சி வழங்கும் எமது புதிய பணியை இலங்கையில் யாழ்ப்பாணத்தில் தொடங்கினோம். அந்நிகழ்வின் சிறு தொகுப்பைத் தங்களுடன் பகிருகின்றோம். இந்நிகழ்விற்கு அறிஞர்கள் இப்பணியை ஊக்குவிக்கும் நோக்கில் ஒத்துழைப்புத் தந்தார்கள். இவ்வாறு உலகெங்கும் மேற்கொள்ள அறிஞர்கள் தொடர்ந்தும் ஒத்துழைப்புத் தருவதாகத் தெரிவித்தனர். இவ்வொளியொலி (வீடியோ) நிகழ்வைப் பார்த்த பின் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம்.


அறிஞர்களின் ஒத்துழைப்போடு இவ்வாறான கருத்தரங்குகளை உலகெங்கும் தொடர, உங்கள் மதியுரைகளையும் வழிகாட்டல்களையும் எதிர்பார்க்கின்றோம்.

திங்கள், 23 மே, 2016

ஊற்று தன் புதிய பணியில் இறங்கி விட்டது

இனிய வலையுறவுகளே! இலக்கிய நாட்டமுள்ள எல்லோருக்கும் வலைப்பூக்களை நடாத்துவது எப்படி, இலக்கியம் படைப்பது எப்படி எனப் பயிற்சி வழங்கி, அதன் பின் அவர்கள் வலை வழியே தமிழ் பரப்ப உதவும் கருத்தரங்குகளை உலகளாவ நடாத்தத் திட்டமிட்டோம். அதன்படிக்கு முதலில் இலங்கையில் யாழ்ப்பாணத்தில் தொடங்கவுள்ளோம். அடுத்து இலங்கையில் திருகோணமலையில் நடாத்தத் திட்டமிட்டுள்ளோம். பின்னர் தமிழ்நாட்டில் சென்னையில் தொடங்கித் தமிழகமெங்கும் நடாத்த எண்ணி உள்ளோம். இவ்வாறே உலகெங்கும் நடாத்தவுள்ளோம். இதன் மூலம் உலகெங்கும் தமிழைப் பரப்பிப் பேண உதவும் பதிவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யலாம் என நம்புகின்றோம்.

எமது கருத்தரங்கு நிகழ்ச்சித் தொகுப்பைக் கீழே பார்க்கவும்.

வலைப்பதிவர்களை ஊக்குவிக்கும் கருத்தரங்கு
1.கணினி அறிமுகம்
2.Html மொழியறிவும் வலைத்தளம் (Web) வடிவமைப்பும்
3.வலைத்தளம் பதிவேற்றல் (Web Hosting), முகவரி சீராக்கல் (Domain Settings)
4.வலைப்பூ (Blog) வடிவமைத்தல்.
5.கருத்துக்களம் (Forum) வடிவமைத்தல்.
6.மின்நூல் வடிவமைப்பும் வெளியீடும்
7.ஊடகங்கள் பற்றிய அறிவு
8.வலைப்பதிவுகளும் கட்டுரைகளும்.
9.நகைச்சுவை, நாடகம், கதைகள் புனைதல்.
10,புதுக்கவிதை, மரபுக்கவிதை, பாடல் புனைதல்.
11.வலை வழியே நற்றமிழ் பேணலாம் வாங்க.
ஏற்பாட்டுக் குழு
'ஊற்று' வலையுலக எழுத்தாளர்கள் மன்றம்


மேற்படி முழு நிகழ்ச்சி நிரலையும் முதன் முதலில் நிகழ்த்த இயலாமையால் முதன் நிகழ்வில் பதிவுகள், வலைப்பூ நுட்பங்கள் பற்றிய கருத்தரங்காகத் தொடங்குகின்றோம். இக்கருத்தரங்கிற்கு அடுத்தாக முழு நிகழ்ச்சி நிரலையும் கொண்ட கருத்தரங்கை நடாத்தவுள்ளோம். அதற்கான அழைப்பிதழைக் கீழே பார்க்கவும்.
எமது இப்பணி உலகெங்கும் வெற்றிகரமாகத் தொடர, தமிழை விரும்பும் (நேசிக்கும்) ஒவ்வொரு உறவுகளது ஒத்துழைப்பையும் நாடி நிற்கின்றோம். 
இவ்வண்ணம்
ஏற்பாட்டுக் குழு
'ஊற்று' வலையுலக எழுத்தாளர்கள் மன்றம்

செவ்வாய், 22 மார்ச், 2016

ஊற்று நடாத்தும் உலகலாவிய போட்டியில் பங்கெடுப்போம்!

போட்டி என்றால்
பெரும் சுமையல்ல - சும்மா
பங்கெடுப்பதே வேலை!
பங்கெடுத்துப் பரிசில் பெற்றால்
வெற்றியின் அடையாளம் - ஆனால்
பரிசில் பெறாவிட்டால்
வெற்றியடைய வழியைக் கற்போம் - அதற்காக
தோல்வியடைந்தவர்கள் என்று
போட்டிகளில் பங்கெடுக்காமல் இருப்போரே
தோல்வியாளர்கள் என்பேன்!

இப்படியெல்லாம் சொல்லாமலே
போட்டிகளில் பங்கெடுப்போரைப் பாராட்டுவோம்!
இப்படியெல்லாம் சொல்லியும் கூட
போட்டிகளில் பங்கெடுக்காமல் இருப்போருக்கு
போட்டி அறிவிப்புகள்
போட்டி பற்றிய தகவல்
எட்டாமல் இருக்கலாம் தானே!

ஊற்று நடாத்தும்
உலகலாவிய போட்டி பற்றி
நாட்டுக்கு நாடு செய்தி ஏடுகளில்
வெளிவந்த வண்ணம் இருக்கே...
ஆயினும்,
வலைப்பதிவர்கள் தமது தளத்தில்
ஊற்று நடாத்தும்
உலகலாவிய போட்டி பற்றி
வெளியிட்டு உதவினால்
போட்டிகளில்
பங்கெடுக்காமல் இருப்போரை
போட்டிகளில் பங்கெடுக்கச் செய்யலாமே!

மதிப்புக்குரிய வலைப்பதிவர்களே!
தங்கள் தளத்தில் பகிர
ஊற்று நடாத்தும்
உலகலாவிய போட்டி பற்றிய
தகவலைப் படிக்க உதவும்
இணைப்பைக் கீழே தருகின்றேன்!

வழி-01


<p><a target="_blank" href="http://ootru1.blogspot.com/2016/03/blog-post.html"><img border="0" src="https://2.bp.blogspot.com/-VSmCwUDq2go/Vt2wSIJgYtI/AAAAAAAAAFo/_YLGap_Y2Cw/s640/kl.jpg" width="200" height="300"></a></p>

வழி-02
http://ootru1.blogspot.com/2016/03/blog-post.html

<p><a target="_blank" href="http://ootru1.blogspot.com/2016/03/blog-post.html">http://ootru1.blogspot.com/2016/03/blog-post.html</a></p>


மதிப்புக்குரிய வலைப்பதிவர்களே!
மேலே தரப்பட்ட நிரலைப் (Code) படியெடுத்துத் தங்கள் தளத்தில் பகிர்ந்து ஒத்துழைப்புச் செய்யுங்கள்.

திங்கள், 7 மார்ச், 2016

ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றத்தினால் நடத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டிக்கு அழைக்கிறோம்… வாருங்கள்… வாருங்கள்



கவிதைகள் சமர்ப்பிக்க வேண்டிய காலம் 08-03-2016தொடக்கம்08-04-2016 
இந்த வலையுலகில் தாங்கள் சாதனைகளை படைக்க வேண்டும் என்ற எண்ண துணிச்சலுடன் இதுவரைக்கும் பல போட்டிகள் நடத்தியுள்ளேன்
 மற்றவர்களுகடன் போட்டி போட்டு உங்களின் ஆக்கங்களை எழுதி அனுப்புங்கள்போட்டியின் நெறிமுறைகள்.

1.கொடுக்கப்பட்டுள்ள தலைப்புக்கு  20வரிகளுக்கு மிகாமல் 
எழுத வேண்டும்.(புதுக்கவிதையாகவும் அல்லது மரபுக்கவிதையாகவும் இருக்கலாம்)

2.மதிப்பெண்கள் வழங்கப்படும். கவிதைக்கு கூடிய மதிப்பெண்பெறும் வெற்றியாளர் தோ்வு செய்யப்படுவார்.

3போட்டிக்கான கவிதையை தங்கள் வலைப்பூவில் தறவேற்றம் செய்யக் கூடாது போட்டிக்கான கவிதைகள் அத்தனையும் ஊற்று வலைத்தளத்தில் மட்டுமே தறவேற்றம் செய்யப்படும்.

4.மின்னஞ்சல் வழியாக மட்டுமே அனைவரும் அனுப்பவேண்டும் இரவு 12 மணிக்குள் (இலங்கை நேரப்படி  ) கவிதையை சமர்ப்பிக்கவேண்டும்

5.நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது

6.மொழிபெயர்ப்பு, முன்னரே வெளிவந்தவை, தழுவல், ஏற்கப்படாது.

8.கலந்து கொள்பவர்கள் பெயர், மின்னஞ்சல் தொலைபேசி இலக்கம் வலைத்தள முகவரி இருந்தால் ஆகிய குறிப்புகளைத் தரவேண்டும்

9. PDF வடிவில் கவிதைகளை அனுப்பவேண்டாம் ஏற்றுக் கொள்ளப்படமாட்டது
10. மின்னஞ்சலில் தட்டச்சு செய்து அனுப்பலாம் அல்லது(WORD) பயிலாக அனுப்பலாம்
11.போட்டிக்கான கவிதை அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி 
ootru2@gmail.com
போட்டிக்கான நடுவராக.
1.கவிஞர்.ரமணி(ஐயா)-இந்தியா
2.கவிஞர்..பச்சைப்பாலன்-மலேசியா
3.அறிஞர்.யாழ்பாவாணன்-இலங்கை
4.வலைச்சித்தர்.தனபாலன்-இந்தியா

முதல் பரிசு, -பதக்கம்.வெற்றிச்சான்றிதழ்
இரண்டாம் பரிசு, -பதக்கம்.வெற்றிச்சான்றிதழ்
மூன்றாம் பரிசு-பதக்கம் +வெற்றிச்சான்றிதழ்
(பதக்கம் .சான்றிதழ் அஞ்சல் வழியாக அனுப்பப்படும்)

நான்கு(04)ஆறுதல் பரிசுகள் (சான்றிதழ்,மட்டும் அஞ்சல் வழியாக அனுப்பப்படும்) பெருவாரியானஎண்ணிக்கையில் பங்கெடுத்துக்கொண்டு தமிழ்வளர்க்க வாரீர் ஏதும் சந்தேகம் இருப்பின் தொடர்புகொள்ளவேன்டிய மின்னஞ்சல் முகவரி இதோ-  ootru2@gmail.com

முன்பு நடைபெற்ற போட்டியில் பங்கு பற்றியவர்களுக்கான பரிசுகள் மிக விரைவில் வந்தடையும் வெளியூர் சென்றதனால் தாமதமாகிவிட்டது... உறவுகளே. 

-நன்றி-
ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றத்தின் அமைப்பாளர்
-கவிஞர்.த.ரூபன்-