வியாழன், 21 ஜனவரி, 2016

2016 தைப்பொங்கல் போட்டி முடிவு நாள் நெருங்கிடுச்சு!

2016 தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி முடிவு நாள் நெருங்கிவிட்டதே! 24-01-2016 நள்ளிரவு (இந்திய, இலங்கை நேரப்படி) 12 மணிக்கு முன்னதாகக் கவிதைகள் அனுப்ப வேண்டிய இறுதி நாளென்று அறிவித்திருந்தோம். வலை உறவுகளே! 'ஊற்று' வலையுலக எழுத்தாளர்கள் மன்றம் நடாத்தும் இப்போட்டிக்கு தாங்கள் படைப்புகளை அனுப்பிவிட்டீர்களா? இன்னுமே இப்போட்டியில் கலந்து கொள்ள முயலவில்லையா? 48 மணி நேரம் போதும் தானே, முயன்று பாருங்கள்.

2015 கார்த்திகை/ மார்கழி காலப் பகுதியில் தமிழ்நாட்டில் (கடலூர், சென்னை) இடம் பெற்ற மாரிமழை கொட்டிப் பெருவெள்ளம் முட்டி ஏற்பட்ட துயர நிகழ்வில் மீட்புப் பணியில் பங்கெடுத்தவர்களின் செயலைக் கண்ணுற்ற நாம், அதனைக் கருத்திற்கொண்டே கீழ்வரும் போட்டித் தலைப்பைத் தந்திருந்தோம்.

போட்டித் தலைப்பு: "பெருமழையில் பெருக்கெடுத்த மனிதாபிமானம்"
போட்டி விரிப்பு : http://ootru1.blogspot.com/2015/12/2016.html


தலைப்பிற்கான சூழலைச் சொன்னால் சட்டென்று பா/கவிதை புனைய வந்திடுமே! அப்படியாயின், இப்போட்டியில் கலந்து கொள்ள 48 மணி நேரம் போதாதா? போட்டித் தலைப்பைத் தந்தும் போட்டித் தலைப்புப் பிறந்த சூழலையும் சுட்டி பா/கவிதை புனைய அழைக்கின்றோம்; இதுவரை போட்டியில் பங்கெடுக்காதவர்களை போட்டியில் பங்கெடுக்குமாறு அழைக்கின்றோம்.

2015 கார்த்திகை/ மார்கழி காலப் பகுதியில் தமிழ்நாட்டில் (கடலூர், சென்னை) இடம் பெற்ற மாரிமழை கொட்டிப் பெருவெள்ளம் முட்டி ஏற்பட்ட துயர நிகழ்வில் சிக்கியோர் இப்போட்டித் தலைப்பிற்கு இலகுவாக பா/கவிதை புனைந்து போட்டிக்கு அனுப்ப முடியும்; ஏனையோருக்குச் சிக்கல் என்கிறீர்களா? அப்படி ஒருபோதும் இருக்காதே!

கருங்கல்லைத் துளைத்தேனும் அதற்கப்பால்
என்ன, எப்படி என்றவாறு
புனைவு (கற்பனை) செய்யும் ஆற்றல்
பாவலர்/கவிஞர் என்பவரின் உள்ளத்தில்
இயல்பாகத் தோன்றும் என்றால்
நம்மால் முடியாதென இருக்கலாமோ?
கண்ணால் கண்டால் புனைவு (கற்பனை) கிட்டாதே
கண்ணால் காணாததால் புனைவு (கற்பனை) கிட்டுமே
உண்மையில் பாப்புனைய விரும்பும்
உம்மாலும் பா/கவிதை புனைய முடியுமே!
உலகெங்கும் உடனுக்குடன் உறுமிய
ஊடகங்களின் தகவலை வைத்தே
ஒரு முறை உண்மை நிகழ்வை
உள்ளக் (மனக்) கண்ணால் பார்த்தே
உங்களைப் பாதிப்புக்கு உள்ளானவராக
எண்ணிக் கொண்டே - எதிரே
உதவிக்கு வந்த உண்மைக் கைகளை
அவர்கள் தந்த நம்பிக் கைகளை (செயல்களை/ மனிதாபிமானத்தை)
பாவாக/ கவிதையாக புனைய இயலுமே!

நீங்களும் உங்கள் நட்பு உறவுகளை இப்போட்டியில் பங்கெடுக்குமாறு ஊக்கப்படுத்துங்கள். ஆதலால், உறவுகளுக்காக உள (மன) நிறைவோடு உதவிய உள்ளங்களை (மனிதாபிமானிகளின் செயலை) வெளிப்படுத்தலாமென்று கூறுங்கள்! கீழுள்ள நிகழ்நிரலைப் (Code) படியெடுத்து உங்கள் வலைப்பக்கங்களில் செயலியாக/விட்ஜட்ஸாக இட்டு, உதவிய உள்ளங்களை (மனிதாபிமானிகளின் செயலை) ஆவணப்படுத்தச் சிறந்த படைப்பை அனுப்பி போட்டியில் பங்கெடுக்க அழைப்புக் கொடுத்து உதவுங்கள்.

<a href="http://ootru1.blogspot.com/2015/12/2016.html" target="_blank"> <img border="0" height="240" src="http://2.bp.blogspot.com/-7ijbsupmI_0/Vns7pM26ysI/AAAAAAAAADg/KSxD_vAqYZM/s640/Untitled-1%2Bcopy.jpg" width="200" /> </a>
உங்கள் தேவைக்கு ஏற்ப width="200" height="240" அளவினை மாற்றிக் கொள்ளலாம்.



உறவுகளே! உங்கள் வலைப்பூக்களை
'ஊற்று' திரட்டியில் இணைத்து - உங்கள்
பதிவுகளைப் பரப்பலாம் வாருங்கள்!

2 கருத்துகள்: